1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 22 ஜூலை 2020 (18:16 IST)

லஞ்சம் கேட்டதால்….தாத்தாவுக்காக ஸ்டெரெக்சரைத் தள்ளிய சிறுவன் ! உருக வைக்கும் வீடியோ

சீனாவில் இருந்து உலமம் முழுவதும் பரவிவரும் கொரொனா வைரஸால் உலகம் முழுவதும் சுமார் 1,51,11,223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 11,92, 915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 1,80,643 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுக்கக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 8 வயது சிறுவன் தனது தாத்தாவின் ஸ்டெக்சரை தள்லிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

பாதிக்கபட்டவர் காலி அடிப்பட்டிருந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது ஒவ்வொரு முறையும் அந்த ஸ்டெக்சரில் அழைத்துச் செல்ல அங்குள்ள ஊழியர் அவர் அவரது குடும்பத்தினரிடம்  ரூ.30 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் தியோரியா மாவட்டத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவரின் மகனும் அவரது தாயும் சேர்ந்து ஸ்டெக்ஸரை தள்ளிகொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் பேசு பொருளானதை அடுத்து, சம்பந்தபட்ட ஊழியரை மருத்துவமனை நிர்வாகம பணியிடை செய்துள்ளது.