1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 26 ஜூன் 2019 (20:42 IST)

போலீஸை வைச்சு அடிக்க சொல்லனுமா..மோடியை கேளுங்க - முதல்வர் காட்டம்!

நீங்கள் ஓட்டுப் போட்டு மோடியைத்தானே ஜெயிக்க வைத்தீர்கள்..ஆனால் உங்கள் பிரச்சனை நான் தீர்த்து வைக்க வேண்டுமா என மக்களைப் பார்த்து கோபத்துடன் கேட்டுள்ளார் அண்டை மாநிலமான கர்நாடகாவின் முதல்வர் குமாரசாமி. இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் வெகுவாகப்பரவி வருகிறது.
கிராமத்தில் தங்கும் திட்டத்துக்காக கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி, ரெய்ச்சூர் என்ற கிராமத்துக்கு அரசுப் பேருந்தில் போய்க்கொண்டுருந்தார்.அப்போது மக்களிடம் உள்ள பிரச்சனைகளை பற்றியும் அவர் கேட்டுக்கொண்டே சென்றார். மக்கள் பிரச்சனைகளை கேட்பதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே. 
 
அப்போது ஏர்மருஸ் அனல் மின் நிலையம் மற்றும் ஹூட்டி தங்கச் சுரங்கத்தில் பணியாற்றும், தொழிலாளர்கள் பலர் தங்களது கோரிக்கைகளை பலத்த கோஷத்துடன் தெரிவித்தனர்.
இதனால் கோபம் அடைந்த முதல்வர் குமாரசாமி , போலீஸை வரவழைத்து உங்கம் மீது தடியடி நடத்த சொல்லனுமா..? நீங்கள் மோடிக்குத் தானே ஓட்டுப்போட்டீர்கள்..உங்கள் பிரச்சனையை நான் தீர்க்கனுமா .. உங்களுக்கு மரியாதையே கிடையாது என்று ஆவேசமாக பேசினார்.
 
இதனால் அங்குள்ள மக்கள் பெரிதும் உணர்ச்சிவசப்பட்டனர். ஆனாலும்  ஏர்மருஸ் அனல் மின் நிலையம் மற்றும் ஹூட்டி தங்கச் சுரங்கத்தில் பணியாற்றும், தொழிலாளர்களின் பிரச்சனைகள் இன்னும் ஒருவாரத்தில் தீர்த்து வைக்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது