1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (10:06 IST)

அடடா! அரசு ஊழியர்களுக்கு 30% சம்பள உயர்வு: எந்த மாநிலத்தில் தெரியுமா?

தெலுங்கானா அரசு, தங்களது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக 30% சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

 
இது குறித்து தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், அரசு ஊழியர்களுக்கு 30% சம்பள உயர்வு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒப்பந்த, வெளிப்பணி ஊழியர்கள் உள்ளிட்ட 9.17 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெறுவர். 
 
அதோடு, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 61 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கான பணிக்கொடை தொகை ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.16 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.