தொடர்புடைய செய்திகள்
- மாநகரப் பேருந்து ஓட்டுநர்களின் திடீர் வேலை நிறுத்தத்தினால் மக்கள் துயரம்- தினகரன்
- சென்னையில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் முடிவு
- ரசிகர்களிடம் மாட்டிக் கொண்ட கீர்த்தி சுரேஷ்…பாதுகாப்பாக மீட்ட ஊழியர்கள்
- ரொம்ப சகஜமாக பேசி சிரித்த ‘தல’ தோனி! – உற்சாகத்தில் சேப்பாக்க மைதான ஊழியர்கள்!
- சேப்பாக்கம் மைதான ஊழியர்களை சந்தித்து பரிசு வழங்கிய தோனி…!
வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு மெமோ? டிசிஎஸ் நிறுவனம் அதிரடி..!
வீட்டில் இருந்து பணி செய்யும் ஊழியர்களுக்கு டிசிஎஸ் நிறுவனம் மெமோ அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நேரத்தில் வீட்டில் இருந்து பணி செய்யும் வொர்க் ப்ரம் ஹோம் முறை தொடங்கப்பட்டது என்பதும் இந்த முறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போதும் சில நிறுவனங்களின் ஊழியர்கள் வொர்க் ப்ரம் ஹோம் முறையை பயன்படுத்தி வருகின்றனர் என்றும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வீட்டிலிருந்து பணி செய்யும் ஊழியர்கள் அதன் சலுகைகளை அத்துமீறி உள்ளதாகவும் இதனை அடுத்து விளக்கம் அளிக்க மெமோ அனுப்பப்பட்டுள்ளதாகவும் டிசிஎஸ் நிறுவனத்திடம் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
டிசிஎஸ் விதித்த நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்காத வீட்டில் இருந்து பணி செய்யும் ஊழியர்கள் இனி வாரத்தில் மூன்று நாட்கள் வீதம் மாதத்தில் 12 நாட்கள் அலுவலகம் வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒரு உற்சாகமான பணியிட சூழலை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களை அலுவலகம் வரச் சொல்கிறோம் என டிசிஎஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
