1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 3 ஜூலை 2019 (12:04 IST)

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் வெளியிட முடிவு – ஆனால் ?

உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளை இனி பிராந்திய மொழிகளிலும் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வெளியாகும் வழக்கின் தீர்ப்புகள் இனி ஆங்கிலம் மட்டும் இல்லாமல் பிராந்திய மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகள் இருக்கும் இந்தப் பட்டியலில் தமிழ் மொழி இல்லாதது வருத்தத்துக்குரியதாக அமைந்துள்ளது.

இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள பலரும் அந்தப் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டுமென உச்சநீதிமன்றத்துக்கு வலியுறுத்தி வருகின்றனர்.