1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 ஜூன் 2021 (12:38 IST)

+2 மார்க் எவ்வளவுன்னு 10 நாள்ல சொல்லுங்க! – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பல மாநிலங்களில் கொரோனா காரணமாக +2 வகுப்புகளுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ள நிலையில் மதிப்பெண் ஒதுக்கீடு விவரத்தை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் காரணமாக பள்ளி, கல்லூரிகள் பல செயல்படாமல் இருந்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா காரணமாக சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மாநில பாடத்திட்டங்களில் உள்ள மாநிலங்கள் சிலவும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின் தேர்ச்சி அறிவித்தன.

ஆனால் மாணவர்களுக்கு மதிப்பெண் அளிக்கும் முறை குறித்து அவை விளக்கம் அளிக்காமல் உள்ளன. இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட மாநில பாடத்திட்டத்தை கொண்ட மாநிலங்களுக்கு புதிய உத்தரவை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது. அதன்படி மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து 10 நாட்களுக்குள் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.