1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 15 மார்ச் 2022 (17:22 IST)

ஹிஜாப் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய மாணவிகள் முடிவு!

ஹிஜாப் விவகாரம் குறித்த வழக்கில் இன்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய உள்ளதாக மாணவிகள் தரப்பினர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஹிஜாப் உள்பட எந்த மத அடையாளங்களுடன் உடை அணிந்து வர தடை விதித்து கர்நாடக அரசு அரசாணை விதித்தது
 
இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ஐகோர்ட்டில் மாணவிகள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது 
 
இதனையடுத்து இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய மாணவிகள் தரப்பு முடிவு செய்ததாகவும் விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது