வியாழன், 26 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2024 (12:48 IST)

அவதூறு வழக்கு: உத்தவ் தாக்கரேயின் சிவசேனா எம்.பிக்கு 15 நாள் சிறை: அதிரடி தீர்ப்பு..!

உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் எம்.பி.க்கு  15 நாட்களுக்குச் சிறை தண்டனை விதித்து அவதூறு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தலைவர் கிரித் சௌமியா மனைவி டாக்டர் கிரித் மேத்தா என்பவர் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். தன் மீது அடிப்படை ஆதாரம் இல்லாத முற்றிலும் அவதூறான வகையில், தனக்கும் தனது கணவருக்கும் எதிராக பேசியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

பயந்தர் முனிசிபல் கார்ப்பரேஷனின் வரம்பிற்குட்பட்ட பொது கழிப்பறைகளை கட்டுவது மற்றும் பராமரிப்பது தொடர்பாக 100 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாக சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியிருந்தார். எனவே இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த அவதூறு வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் சஞ்சய் ராவத்திற்கு 15 நாள் சிறை தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதித்து மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்தவ்தேவ் தாக்கரே, சிவசேனா, எம்பி,அவதூறு வழக்கு: உத்தவ் தாக்கரேயின் சிவசேனா எம்.பிக்கு 15 நாள் சிறை: அதிரடி தீர்ப்பு..!

உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் எம்.பி.க்கு  15 நாட்களுக்கு சிறை தண்டனை விதித்து அவதூறு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தலைவர் கிரித் சௌமியா மனைவி டாக்டர் கிரித் மேத்தா என்பவர் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். தன் மீது அடிப்படை ஆதாரம் இல்லாத முற்றிலும் அவதூறான வகையில், தனக்கும் தனது கணவருக்கும் எதிராக பேசியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

பயந்தர் முனிசிபல் கார்ப்பரேஷனின் வரம்பிற்குட்பட்ட பொது கழிப்பறைகளை கட்டுவது மற்றும் பராமரிப்பது தொடர்பாக 100 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாக சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியிருந்தார். எனவே இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த அவதூறு வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் சஞ்சய் ராவத்திற்கு 15 நாள் சிறை தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதித்து மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran