1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (10:41 IST)

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு: முதலீட்டாளர்களுக்கு ஆறுதல்

Share
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த இரண்டு வாரங்களாக சரிவில் இருந்தது என்பதும் இதனால் லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் தங்களது கோடிக்கணக்கான முதலீடுகளை இழந்தனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது
 
சற்றுமுன் வரை 765 புள்ளிகள் உயர்ந்து 52 ஆயிரத்து 362 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 235 புள்ளிகள் உயர்ந்து 15,685 என்ற வகையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இரண்டு வார சரிவுக்கு இந்த உயர்வு ஈடு இல்லை என்றாலும் முதலீட்டாளர்களுக்கு இன்றைய உயர்வு ஒரு ஆறுதலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது