ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (18:17 IST)

கிண்டல் செய்த இளைஞனை செருப்பால் அடித்த துணிச்சலான பள்ளி மாணவி!

கிண்டல் செய்த இளைஞனை செருப்பால் அடித்த துணிச்சலான பள்ளி மாணவி!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு இளைஞன் தன்னை தொடர்ந்து கொண்டல் செய்யும் விதமாக நடந்துகொண்டதால் இளம்பெண் ஒருவர் அவனை செருப்பால் அடித்த சம்பவம் நடந்துள்ளது.


 
 
பரேலி மாவட்டம் சய்ஜினா அருகே பள்ளி மாணவி கீதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு இளைஞன் காதலித்து வந்துள்ளான். ஒரு சிலர் காதலிக்கும் பெண்ணை கிண்டல் செய்வது வழக்கம். அதன் மூலம் அவள் காதலிப்பாள் என்று.
 
பள்ளிக்கு சென்று கொண்டிருந்த கீதாவின் பின்னால் சென்று அந்த இளைஞன் அவரை தொடர்ந்து கிண்டல் செய்துள்ளான். பின்னர் பள்ளி முடிந்து கீதா வீடு திரும்பும் போது அவளை இடையில் மறித்த அந்த இளைஞர் தான் காதலிப்பதாக கூறியுள்ளான்.
 
உடனே அந்த பெண் கூச்சலிட்டு அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். பின்னர் தன் செருப்பை எடுத்து அந்த இளைஞனை அடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.