1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 23 ஜனவரி 2023 (15:46 IST)

அதிக குழந்தைகளை பெற்றுக்கொண்டால் ஊதிய உயர்வு: இந்திய மாநிலம் அதிரடி அறிவிப்பு!

babies
இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது என்றும் சீனாவை விட இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
எனவே இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் குடும்ப கட்டுப்பாடு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் அதிக குழந்தைகளை பெற்றுக் கொண்டால் ஊதிய உயர்வு என பெண் ஊழியர்களுக்கு சிக்கிம் மாநில அரசு தெரிவித்துள்ளது. 
 
இது குறித்து சிக்கிம் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்டால் ஊதிய உயர்வு என்றும்,  மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் இரண்டாவது ஊதிய உயர்வும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது
 
சிக்கிம் மாநிலத்தில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva