தொடர்புடைய செய்திகள்
- விவசாயிகள எல்லையிலயே தடுக்கணும்; சலோ டெல்லி பேரணிக்கு எதிராக போலீஸ் குவிப்பு!
- இந்திய வரலாற்றில் முதன்முறையாக… பொங்கலுக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை!
- இனி தமிழ் மொழியிலேயே தொழில்நுட்ப கல்வி! – மத்திய அரசு அறிவிப்பு!
- ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவிற்கு அவசியம்! – பிரதமர் மோடி கருத்து!
- மரடோனா இழப்பிற்கு வருந்தும் கேரளா; 2 நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவிப்பு!
சபரிமலையில் குவியும் கூட்டம்: அனுமதி எண்ணிக்கை அதிகரிப்பு!
சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் நிறைய பக்தர்கள் குவிவதால் அனுமதி எண்ணிக்கையை அதிகரிப்பதாக தேவசம்போர்டு முடிவெடுத்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில் மலைக்கு மாலைபோட்டு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முன்னதாக நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்றும், அவர்களும் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால் பலரால் முன்பதிவு செய்ய முடியவில்லை என்றும், மாலை போட்டும் மலைக்கு போக முடியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒருநாளைக்கு 1000 பேர் என்பது தேவசம்போர்டு வருமானத்தையும் வெகுவாக குறைத்திருப்பதால் இனி நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேரை அனுமதிக்க தேவசம்போர்டு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
அடுத்த கட்டுரையில்
