1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (12:27 IST)

குறைந்த விலையில் ரூ.48,000 கோடி செலவில் வீடுகள் கட்டித்தரப்படும்: அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

குறைந்த விலையில் 45 ஆயிரம் கோடி செலவில் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே மத்திய அரசு ஒருசில திட்டங்களின் மூலம் மானிய விலையில் வீடுகள் ஏழை எளியவர்களுக்கு வழங்கி வருகிறது என்பது தெரிந்ததே ]
 
இந்த நிலையில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூபாய் 45 ஆயிரம் கோடி வரும் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட உள்ளன என்று தெரிவித்துள்ளார் 
 
குறைந்த விலையில் வீடுகள் கட்டி உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்