ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (12:08 IST)

ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு முறை: மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே ரேஷன் கடை உள்பட பல்வேறு அம்சங்கள் பிரதமர் மோடியின் ஆட்சியில் அமர்த்தப்பட்ட நிலையில் தற்போது ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு முறை என்ற முறை அமல்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார் 
 
ஒரே நாடு ஒரே பதிவு முறையை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் எந்த ஒரு பகுதியில் உள்ள இடத்தையும் பத்திரப் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் இந்த வசதிக்காகத்தான் ஒரே நாடு ஒரே பதிவு முறையை கொண்டுவர முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார் 
 
மத்திய அமைச்சரின் ஒரே நாடு ஒரே பதிவு முறைக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது