1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2022 (15:05 IST)

சேட்டாக்களே பலே பலே… 5 நாட்களில் ரூ.324 கோடி மதுபான விற்பனை!

ஓணம் பண்டிகையையொட்டி 5 நாட்களில் மட்டுமே 324 கோடி ரூபாய்க்கு மதுபான விற்பனை.


கேரளாவில் இன்று ஓணம் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் ஓணம் கொண்டாடும் கேரள மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையையொட்டி 5 நாட்களில் மட்டுமே 324 கோடி ரூபாய்க்கு மதுபான விற்பனை நடைபெற்றிருக்கிறது. ஆம், கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 4 ஆம் தேதி வரை 324 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானங்கள் விற்பனையாகி இருப்பதாக கேரள மாநில மதுபான கழகம் தெரிவித்துள்ளது.

விஸ்கி, பிராந்தி, பீர் வகைகள் அதிகளவு விற்பனையாகியுள்ளது என கேரள மாநில மதுபான கழகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 248 கோடி ரூபாய்க்கு மட்டும் மது விற்பனை நடைபெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.