வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 1 ஜூன் 2019 (10:31 IST)

இனிமே சட்னி சாப்பிட தோணுமா..? கையேந்தி பவனில் ச்ச்ச்..சீ...

கையேந்தி பவனில் சட்னி அரைக்க கழிவறையில் இருந்து தண்ணீர் எடுத்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
பொரும்பாலானோரின் வாழ்க்கைக்கு கைகொடுப்பவை கையேந்தி உணவு விற்பனையகங்கள்தான். அப்படி இயங்கி வந்த கையேந்தி பவன் ஒன்றில் சட்னி அரைப்பதற்கான தண்ணீரை அருகில் இருந்த கழிவறையில் இருந்து எடுத்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மும்பை போரிவலி ரயில் நிலையம் அருகேதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து அப்பகுதியை உணவுபாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.