1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 26 ஜூலை 2023 (08:56 IST)

பிரதமர் மோடி மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! – எதிர்கட்சிகள் அதிரடி முடிவு!

PM Modi
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க குரல் எழுப்பி வரும் எதிர்கட்சிகள் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி 4 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வரும் நிலையில் நாடாளுமன்ற கூட்டம் தொடர்ந்து 4 நாட்களாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று பாஜக நாடாளுமன்ற கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் நாடாளுமன்றம் சுமூகமாக செயல்பட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் எதிர்கட்சிகள் கூட்டத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி அறிக்கை வெளியிடும் வரையில் போராட்டம் தொடரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அறிக்கை மற்றும் விளக்கம் தராத பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர 26 கட்சிகள் அடங்கிய மெகா எதிர்கட்சி கூட்டணி முடிவு செய்துள்ளது. இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

Edit by Prasanth.K