1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (13:11 IST)

செம்மரக் கடத்தல் விவகாரம்: ஆந்திராவில் 10 தமிழகர்கள் கைது..!

செம்மர கடத்த விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

திருப்பதி அருகே செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக ஆந்திர காவல்துறைக்கு தகவல் வெளியான நிலையில் அங்கு வாகன சோதனை செய்யப்பட்டது. அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உள்பட 13 பேர் செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இதில் சங்கர் என்ற முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக கடப்பா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட செம்மரக்  கடத்தல்   வழக்குகள் சங்கர் மீது நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ரூபாய் 71 லட்சம் செம்மரக்கட்டைகள் போல செய்துள்ளதாகவும் இருசக்கர வாகனங்கள் மற்றும் சொகுசு காரையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது

Edited by Siva