வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 19 ஜூன் 2020 (21:00 IST)

ராஜ்யசபா தேர்தல்: ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி!

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி!
ராஜ்யசபா தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் அதன் முடிவுகள் தற்போது வெளிவர தொடங்கியுள்ளன. ராஜஸ்தானில் காங்கிரஸ் 2  இடங்களிலும் பாஜக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல் மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக 2 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வென்றன.
 
ஆந்திராவில் மொத்தமுள்ள 4 இடங்களையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியை கைப்பற்றியுள்ளன.
 
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் செய்த பிரச்சனையால் அங்கு வாக்கு எண்ணும் பணி தாமதமாகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மற்ற மாநிலங்களில் நடந்த ராஜ்யசபா தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதாகவும் விரைவில் இதன் முடிவுகள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது