1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (14:47 IST)

ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்க அனுமதி மறுப்பு: என்ன காரணம்?

Rahul
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வாரணாசி கோவிலில் தரிசனம் செய்ய ராகுல் காந்தி திட்டமிட்டிருந்த நிலையில் வாரணாசிக்கு தனி விமானம் மூலம் ராகுல் காந்தி சென்றார். 
 
அப்போது அந்த விமானம் கடுமையான நெரிசல் காரணமாக தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 
 
ஆனால் ராகுல் காந்தி விமானத்தை திட்டமிட்டு தரையிறங்க அனுமதி அளிக்கவில்லை என்றும் ராகுல் காந்தி மீது உள்ள அச்சத்தின் காரணமாக உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அவரது விமானத்தை தரையறுக்க அனுமதிக்கவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. 
 
 
Edited by Mahendran