1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 6 டிசம்பர் 2022 (22:30 IST)

சொத்துத் தகராறு; உறவினரின் தலையை வெட்டி செல்ஃபி எடுத்த இளைஞர்!

ஜார்கண்ட் மாநிலத்தில் சொத்துத் தகராறு காரணமாக ஒருவர் தன் உறவினரின் தலையினரை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட்  மாநிலம்  குந்தி மாவட்டத்தில்  உள்ள ஒரு பகுதியில் வசித்து வரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 20 வயது நபர் , சொத்துத் தகராறு காரணமாக அவருடைய 24 வய்து உறைவினரின் தலையை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள  நிலையில், கொலை செய்த நபர், அந்த இளைஞரின் தலையுடன் செல்ஃபி எடுத்துள்ளார்.

சம்பவத்தன்று மாலை கொல்லப்பட்ட இளைஞரின் தந்தை வீடு திரும்பிய போது, மகன்  கொலை செய்யப்பட்டதாக போலீஸில் புகாரளித்துள்ளளார்.

இது கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 
Edited by Sinoj