1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2024 (13:00 IST)

புதிய அரசியல் கட்சி.. சட்டமன்ற தேர்தலில் போட்டி.. பிரசாந்த் கிஷோர் அதிரடி..!

பிரபல அரசியல் கணிப்பு வல்லுனர் பிரசாந்த் கிஷோர் புதிய அரசியல் கட்சி தொடங்கி 2025 ஆம் ஆண்டு பீகாரில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அரசியல் கட்சிகளிடம் கோடி கணக்கில் பணம் வாங்கி அக்கட்சியை ஜெயிக்க வைக்க டிஜிட்டல் மூலம் பணி செய்து வரும் நிறுவனத்தை நடத்தி வருபவர் பிரசாந்த் கிஷோர் என்பதும் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்காக அவர் பணிபுரிந்தார் என்பதும் தெரிந்தது. 
 
இந்த நிலையில் ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற இயக்கத்தை நடத்தி வரும் நிலையில் அந்த இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் தேதி தனது ஜன் சுராஜ் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்யப் போவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். மேலும் வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் களமிறங்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran