வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (13:05 IST)

காங்கிரஸே வன்முறையை தூண்டுகிறது.. மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

காங்கிரஸ் மற்றும் இடது சாரிகளே பல்கலைக்கழகங்களில் வன்முறையான சூழலை தூண்டுகின்றனர் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றபோது உள்ளே நுழைந்த மர்ம கும்பல் இரும்பு கம்பிகளால் மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த பல மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதல் கண்டனத்துக்குரியது என கூறியுள்ளார். மேலும் காங்கிரஸ், இடது சாரி கட்சிகள் பல்கலைகழகங்களில் வன்முறை சூழலை உண்டாக்க தூண்டுகிறார்கள் எனவும் விமர்சித்துள்ளார்.