தொடர்புடைய செய்திகள்
- பட்ஜெட் அறிவிப்பில் மானியங்கள் கணிசமாக குறைப்பு! – எதிர்கட்சிகள் அதிருப்தி!
- கொரோனாவிலும் பொருளாதாரத்தில் உயர்ந்த இந்தியா! – நிதியமைச்சர் பெருமிதம்!
- நாடாளுமன்றத்தில் எதை பற்றியும் விவாதிக்க தயார்! – பிரதமர் மோடி உறுதி
- 75 சதவீதத்திற்கு மேல் இரண்டு டோஸ் தடுப்பூசி! – பிரதமர் மோடி பெருமிதம்!
- நாங்க ஆட்சிக்கு வந்தா 10 ரூபாய்க்கு நல்ல சாப்பாடு! – அகிலேஷ் யாதவ் வாக்குறுதி
மத்திய பட்ஜெட் மனதுக்கு நிறைவாக உள்ளது! – பிரதமர் மோடி!
மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதுகுறித்து பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்டது. பல்வேறு துறை சார்ந்த நிதி ஒதுக்கீடு அறிவிப்புகள், புதிய திட்டங்கள், கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றிற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அதேசமயம் மானியங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் எதிர்கட்சிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ஆண்டு பட்ஜெட் குறித்து பேசியுள்ள பிரதமர் மோடி, மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட் வேலைவாய்ப்பு மற்றும் மக்கள் நலனை கருத்தில் கொண்டுள்ளதாகவும், மனநிறைவை அளிப்பதாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளார். விவசாய பொருட்களுக்கான ஆதார விலைக்கு பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் நாளை காலை 11 மணிக்கு பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் குறித்து உரையாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
