1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 8 நவம்பர் 2021 (08:03 IST)

பொதுப் பங்கு வெளியீட்டில் களமிறங்குகிறது பேடிஎம் நிறுவனம்

முன்னணி பணபரிவர்த்தனை நிறுவனங்களில் ஒன்றான பேடிஎம் தற்போது போது பங்கீட்டு களமிறங்குகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது
 
பொது பங்கு வெளியீட்டில் பேடிஎம் நிறுவனம் இன்று முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை பொதுப்பங்குகள் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரு பங்கின் விலை 2080 ரூபாய் முதல் 2,250 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் பங்கு வெளியீட்டின் மூலம் ரூபாய் 18 ஆயிரத்து 300 கோடி திரட்ட இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியிட்டுள்ளன
 
பேடிஎம் நிறுவனத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல மதிப்பும் மரியாதையும் இருப்பதால் பேடிஎம் பொதுப் பங்கு வெளியீட்டை வாங்குவதற்கு பல முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது