வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 24 மே 2023 (08:14 IST)

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா.. புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்..!

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே அறிவித்துள்ளன. 
 
இந்த நிலையில் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா அழைப்பு கிடைத்ததும் புறக்கணிப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய எதிர்கட்சிகள், குடியரசு தலைவர் தான் நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்க வேண்டும் என்றும் அவரை புறக்கணித்தது தவறு என்று கூறி வருகின்றனர்
 
காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்கட்சிகளும் நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva