வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 9 ஜூன் 2016 (18:27 IST)

காளஹஸ்தி கோவிலில் நிர்வாண சாமியார்: அதிர்ச்சியில் ஓடிய பெண்கள்

ஆந்திரா மாநிலம் காளஹஸ்தி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த நிர்வாண சாமியாரை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 

 

 
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த திருகனக துர்காதேவி யோகேஷ்வர் சரஸ்வதி சுவாமிகள், நிர்வாணமாக இருப்பதால் அவர் நிர்வாண சாமியார் என்று அழைக்கப்படுவார். இவர் உடல் முழுவதும் பூ மாலை அணிந்திருப்பது வழக்கம்.
 
இவர் காளஹஸ்தி கோவிலுக்கு வழிபட சென்றபோது அங்கிருந்த பக்தர்கள் இவரைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும்  கோவிலுக்கு நிர்வாண சாமியாரை எப்படி அனுமதித்தனர் என்று பக்தர்கள் கோவில் நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
அதற்கு கோவில் நிர்வாகிகள், நிர்வாண சாமியார் அறநிலைத்துறையிடம் அனுமதி பெற்று தான் வந்துள்ளார், என்று கூறியுள்ளனர்.
 
கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களோடு நிர்வாண சாமியாரும் சென்றதால் இடையூறு ஏற்பட்டு மக்கள் கொத்தளித்துள்ளனர்.