1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 13 அக்டோபர் 2023 (08:40 IST)

5 மாநில சட்டமன்ற தேர்தல்: 2 மாநிலங்களில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்..!

Election Commission
நவம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட சத்தீஸ்கர், மிசோரம்  ஆகிய இரண்டு மாநிலங்களில்  வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

மிசோரமில் 40 தொகுதிகளிலும், சத்தீஸ்கரில் முதல் கட்டமாக 20 சட்டப்பேரவை  தொகுதிகளில் நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இரு மாநிலங்களிலும் வேட்புமனுவை தாக்கல் இன்று தொடங்குகிறது. மேலும் வேட்புமனு தாக்க செய்ய அக்டோபர் 20 கடைசி நாளாகும்

வேட்பு மனு மீதான பரிசீலனை அக்டோபர் 21ம் தேதியும், மனுவை திரும்பப் பெற அக்டோபர் 23ம்  தேதியும் கடைசி நாளாகும்

முன்னதாக மிசோரத்தில் நவம்பர் 7ம் தேதியும், மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17ம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 23ம் தேதியும், தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதியும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சத்தீஸ்கரில் மட்டும் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ராஜஸ்தான் மாநில தேர்தல் நவம்பர் 25 என பின்னர் மாற்றப்பட்டது.

Edited by Siva