வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 10 பிப்ரவரி 2020 (17:24 IST)

கொரோனாவை ஒழிக்க நித்யானந்தா கூறும் எளிய வழி..

நித்யானந்தா

கொரோனாவை ஒழிக்க நித்யானந்தா தனது காணொளியில் எளிய வழி ஒன்றை கூறியுள்ளார்.

கொரோனா வைரஸால் சீனாவில் மட்டுமே இதுவரை 900க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.

கொரோனா வைரஸால் சீனாவில் மட்டுமே 20,000 மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிப்பதற்கும் பல நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸை அழிக்க நித்யாந்தா தனது காணொளியில் ஆலோசனை வழங்கியுள்ளார். அதாவது, தொடர்ந்து இடைவிடாமல் “ஓம் நித்யாந்த பரமசிவோஹம்” என கூறிவந்தால் கொரோனா வைரஸ் அழிந்து போகுமாம்.