1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (10:38 IST)

குஜராத் உள்பட 8 மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை.. என்ன காரணம்?

NIA1
குஜராத் உள்பட 8 மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை.. என்ன காரணம்?
குஜராத் உள்பட 8 மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, சண்டிகர், உத்தரப்பிரதேசம், குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.,
 
ரவுடி கும்பலை ஒலிக்கும் நோக்கத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் 8 மாநிலங்களில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ரவுடிகள் மற்றும் அவர்களின் குற்றவியல் மீது பதிவு செய்துள்ள வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே மூன்று சுற்றுகள் சோதனை நடத்திய நிலையில் இது ரவுடிகளுக்கு எதிரான நான்காவது சுற்று சோதனை என்றும் கூறப்படுகிறது
 
Edited by Siva