1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (13:10 IST)

பக்கத்து வீட்டுக்காரர்களை தலைகீழாக தொங்கவிட்டு சிறுநீர் கழித்த கொடூரம்!

Maratiyam
மராட்டிய  மாநிலத்தில்  இளைஞர்கள் சிலர் பக்கத்து வீட்டுக் காரர்கள் 4 பேரை தலைகீழாகத் தொடங்கவிட்டு அடித்துத் துன்புறுத்தி, அவர்கள் மீது சிறுநீர் கழித்த கொடூரம் நடந்துள்ளது.
 
மராட்டிய  மாநிலத்தில் முதல்வர்  ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா( எதிர்ப்பு அணி) பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு இளைஞர்கள் சிலர் பக்கத்து வீட்டுக் காரர்கள் 4 பேரை தலைகீழாகத் தொடங்கவிட்டு அடித்துத் துன்புறுத்தி, அவர்கள் மீது சிறுநீர் கழித்த கொடூரம் நடந்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் சமீபத்தில் ஒரு வாலிபர் தலைகீழாகக் கட்சி தொங்கவிட்ட்டிருந்த வீடியோ  இணையதளங்களில் வெளியாகி பரவியது. இதுபற்றி போலீஸார் விசாரணை செய்து வந்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட வாலிபர் போலீஸார் புகார் அளித்திருருந்தார். அதில், ‘’நாங்கள் சிறுபான்மை சமூகத்தினர் என்பதால்   என் பக்கத்து வீட்டுக்காரக்ள், என்னுடன் சேர்ந்து மேலும் 3 சிறுவர்களை அடித்துத் துன்புறுத்தி, எங்கள் மீது சிறுநீர் கழித்தனர்’’ என்று கூறி அவர்களின் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர்.  அவர்கள், பப்பு பார்கே, ராஜூ போக்கே, கலண்டே மற்றும் பாட்டீல் ஆவர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரித்து வருகின்றனர். இதில் ஒருவரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருவதாகத் தகவல் வெளியாகிறது.