ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 28 அக்டோபர் 2021 (09:21 IST)

ஆர்யன்கானுடன் செல்பி எடுத்தவர் பிடிபட்டார்

ஆர்யன் கான் கைதான போது அவருடன் செல்பி எடுத்த கிரண் கோசாவி புனேவில் இன்று பிடிபட்டுள்ளார். 

 
பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரை ஜாமீனில் எடுக்க அவரது தரப்பு பெறும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 
ஆனால் ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைக்காத நிலையில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை மூன்றாவது நாளாக இன்றும் தொடரவுள்ளது.
 
இந்நிலையில் ஆர்யன் கான் கைதான போது அவருடன் செல்பி எடுத்த கிரண் கோசாவி புனேவில் இன்று பிடிபட்டுள்ளார். ஆம், போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சாட்சியாக இருந்த இவர் பிடிபட்ட நிலையில் போலீஸார் இவரை விசாரித்து வருகின்றன.