வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 31 ஜூலை 2019 (09:44 IST)

முஸ்லிம் சிறுவனை உயிரோடு எரித்த ஜெய் ஸ்ரீராம் கோஷ்டி: உபி-யில் பயங்கரம்!

உத்திர பிரதேச மாநிலத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லாத காரணத்தால் சிறுவன் எரித்து கொல்லப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
உத்திர பிரதேச மாநிலம் சந்தவுலி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் முகமது காலித்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4 பேர் காரில் கடத்தி சென்றுள்ளனர். மேலும் அந்த சிறுவனை ஜெய் ஸ்ரீராம் என கூறும்படி வற்புறித்தியுள்ளனர். சிறுவன அதை செய்ய மறுத்ததால் மண்ணெண்ணெய் ஊற்றி சிறுவனை எரித்துள்ளனர். 
 
50% காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதையடுத்து சிறுவனின் தந்தை அந்த நால்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸில் புகார் அளித்துள்ளார். 
 
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுவன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் கடும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.