1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 6 ஜூன் 2024 (14:26 IST)

மோடி பதவியேற்பு விழா..! உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்பு..!!

Modi Won
இந்திய பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ள நிலையில், பதவியேற்பு விழாவில் உலக  நாட்டு தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில், அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர்.

அதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார். பிரதமராக பொறுப்பேற்கும் மோடிக்கு 75க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதே போல், நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் உலகத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 


அதில், நேபால் பிரதமர் புஷ்ப கமல் தஹால், பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.