1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 டிசம்பர் 2023 (11:41 IST)

மருமகனை அரசியல் வாரிசாக அறிவித்த மாயாவதி.. பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர்கள் அதிருப்தி..!

பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மாயாவதி தனது அரசியல் வாரிசாக மருமகனை அறிவித்துள்ளதால் அக்கட்சியில் உள்ள பிரமுகர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய தலைவராக மாயாவதியின் மருமகன் ஆகாஷ் ஆனந்த் அறிமுகம் செய்யப்பட்டார். 
 
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுமக்களவைத்  தேர்தலில் அவரை அரசியல் வாரிசாக மாயாவதி அறிவித்துள்ளார். இளம் தலைவர் கட்சிக்கு தேவை என்பதால் ஆகாஷ் ஆனந்தை அரசியல் வாரிசாக அறிமுகம் செய்கிறேன் என்றும்  அவரை எனது குடும்ப உறுப்பினராக கருதாமல் கட்சித் தொண்டர் ஆக கருதுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். 
 
குடும்ப அரசியல் குறித்து கடும் விமர்சனம் செய்த மாயாவதி தற்போது அவரே தனது மருமகனை அரசியல் வாரிசாக அறிவித்திருப்பதை அடுத்து கட்சியில் உள்ள பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran