1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 மே 2023 (10:39 IST)

மணிப்பூரில் 25 தமிழர்களின் வீடுகள் தீக்கிரை.. குறிவைத்து தாக்கப்பட்டார்களா?

மணிப்பூரில் 25 தமிழர்களின் வீடுகள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் குறிவைத்து தாக்கப்பட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள குக்கி- மைத்தேயி ஆகிய இரு இனங்கள் இடையே இன்று  மோதல் ஏற்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரு பிரிவினர் மாடலில் திடீரென தமிழர்கள் வீடு தாக்கப்பட்டதாகவும் 25 தமிழர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மணிப்பூரில் தமிழர்கள் குறிவைத்து தாக்கப்பட்டார்களா அல்லது இரு பிரிவினர் கிடையே நடந்த மோதலில் தற்செயலாக அவர்களது வீடுகள் தாக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது

மணிப்பூரில் தமிழர்கள் வீடு தீக்கிரை ஆக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran