வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 11 செப்டம்பர் 2021 (15:51 IST)

வேனில் வைத்து பெண் பாலியல் வல்லுறவு… 33 மணிநேர போராட்டத்துக்குப் பின் மரணம்!

மும்பையில் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவு செய்து இரும்பு ராடால் தாக்கியுள்ளான் கொடூரன் ஒருவன்.

மும்பை கைராணி பகுதியில் செப்டம்பர் 9-ம் தேதி அதிகாலையில் பெண் ஒருவர் சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக போலிஸாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் அந்த பெண்ணை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மருத்துவர்கள் அந்த பெண்ணை பரிசோதித்ததில் அவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரின் பிறப்புறுப்பு கடுமையாக தாக்கப்பட்டு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலிஸார் சிசிடிவி கேமராக்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் மோகன் சவான் என்ற கொடூரனைக் கைது செய்துள்ளனர்.

மோகன் சவான் அந்த பகுதியில் டெம்போ வாகனம் ஒன்றில் வைத்து அந்த பெண்ணை வல்லுறவு செய்து தாக்கியுள்ளார். இதில் அந்த பெண்ணின் ரத்தம் டெம்போ வாகனம் முழுவதும் பரவியுள்ளது. சிகிச்சை அளிக்கப்பட்ட அந்த பெண் 33 மணிநேரம் கழித்து மரணமடைந்துள்ளார்.