1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 24 ஜூன் 2021 (12:01 IST)

டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றால் முதல் மரணம்

மத்திய பிரதேச மாநிலத்தில் உஜ்ஜெயினியில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றால் ஒரு மரணம் ஏற்பட்டுள்ளது. 

 
மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு மூன்று மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. 
 
இந்த வைரஸ் மனிதர்களின் உடலுக்குள் புகுந்து செல்லும் திறன் கொண்டது என்றும் எனவே எதிர்ப்பு சக்தி மிகுந்தவர்களாக இருந்தாலும் இந்த புதிய டெல்டா பிளஸ் வைரஸ் எளிதில் தொற்று பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் உஜ்ஜெயினியில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றால் ஒரு மரணம் ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றால் ஏற்பட்ட முதல் மரணமாகும்.