ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : புதன், 4 டிசம்பர் 2019 (14:37 IST)

நாட்டில் அடித்துக் கொலை செய்யப்படுவதை தடுக்க சட்ட திருத்தம் !

மாட்டிறைச்சி விவகாரத்தில் சிலர் குழுவாகச் சேர்ந்து கொண்டு, அடித்துக் கொலை செய்யும் சம்பவங்கள் நாட்டில் நிகழ்ந்து  வருகின்றன.இந்நிலையில், இதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநிலங்களவையில் அவர் கூறியதாவது :
 
அடித்துக் கொலை செய்யப்படுவது குறித்து சட்ட திருத்தங்களை செய்யும்படி, மாநில அரசுகளுக்கு  மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
 
இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டங்களில் தேவையான திருத்தங்கள் செய்வது குறித்து பரிந்துரைக்கவும் மத்திய நிபுணர் குழுவை அமைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.