தொடர்புடைய செய்திகள்
- பிரபல நடிகர் படத்தில் ரீ எண்ட்ரீ… மீண்டும் நடிக்கும் ஹிட் பட நடிகை !
- கேரளாவில் இனி அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படும் – விஞ்ஞானியின் அதிர்ச்சி முடிவு!
- நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்கள் – கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்!
- விமானம் மீது மோதிய பறவை ... பயணிகள் அதிர்ச்சி...பெரும் விபத்து தவிர்ப்பு
- கேரளா விமான விபத்து : இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ 10 லட்சம் இழப்பீடு
கோழிக்கோடு விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்க தடை
துபாயில் இருந்து வந்த ஏர் இந்திய விமானம் கேரள மாநிலம் கோழிக்கோடில் , மோசமான வானிலையால் விமான ஓடுதளத்தில், இறங்கும்போது இரண்டாக உடைந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கபபட்டனர், ஒரு பைலட் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரை இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்து துறை இயக்குநரகம்அறிவித்துள்ளதாவது :
மழைக்காலங்களில் மிகப்பெரிய அமைப்பு கொண்ட விமானங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
மேலும், கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்தை தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கேரளாவில் பெய்து வரும் பலத்த மழை வெள்ளம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
