வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 26 நவம்பர் 2022 (09:46 IST)

சபரிமலை தரிசனத்திற்கு 8.75 லட்சம் பேர் முன்பதிவு! – களைகட்டும் யாத்திரை!

சபரிமலை ஐயப்பன் கோவில் யாத்திரை தொடங்கியுள்ள நிலையில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைகளுக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அலைமோதுகிறது. கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருந்து, இருமுடி கட்டி பலரும் வந்து செல்கின்றனர்.

தற்போது மண்டலபூஜைகளுக்காக நடை திறக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் வரை 3,84,106 பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்துள்ளனர். இதுதவிர ஏராளமான பக்தர்கள் நேரடி முன்பதிவு மூலமாகவும் தரிசனம் செய்துள்ளனர்.

மேலும் நவம்பர் 30 வரை சபரிமலை தரிசனத்திற்கு 8.79 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. நேரடி முன்பதிவுகளையும் சேர்த்தால் இந்த மாத இறுதிக்கும் சுமார் 10 லட்சம் ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit By Prasanth.K