1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 6 டிசம்பர் 2019 (17:29 IST)

'என் புருஷனை கொன்ன இடத்தில் என்னையும் கொல்லுங்க...' குற்றவாளி மனைவி !

தெலுங்கானா  மாநிலம் ஹைதராபாத்தில் சமீபத்தில் பெண் மருத்துவ டாக்டர் பிரியங்கா ரெட்டி, நான்கு பேரால் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து துரித வேகத்தில் செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்தனர்.
அதன்பின்னர், பாராளுமன்றத்திலும் இதுகுறித்து எதிர்கட்சிகள் விவாதம் எழுப்பினர். இந்நிலையில், இன்று அதிகாலை 4 குற்றவாளிகளும் தப்பித்துச் செல்ல முயன்றதாக போலீஸாரால் எண்கவுன்டர் செய்து சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 
இந்நிலையில், சுட்டுக்கொல்லப்பட்ட குற்றவாளி கேசவலுவின் மனைவி ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.
 
அதில், எனது கணவர் இறந்த இடத்துக்கே என்னையும் கூட்டிச் செல்லுங்கள். எங்களுக்கு திருமணமாகி ஒருவருடம் தான் ஆகிறது. நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.