1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 6 டிசம்பர் 2019 (15:29 IST)

”சல்யூட், ஹைதராபாத் போலீஸுக்கு சல்யூட்”.. பேட்மிண்டன் வீராங்கனையின் டிவிட்

ஹைதராபாத் காவல் துறையை சல்யூட் செய்கிறேன் என டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் பிரபல பேட்மிண்ட வீராங்கனை சயினா நேவால்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில் பெண் மருத்துவரை கொலை செய்த 4 பேரை போலீஸார் இன்று காலை சுட்டுக்கொன்றுள்ளது.

அதாவது 4 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்த முயன்றபோது தப்பி ஓட முயன்றதாகவும், ஆதலால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் எனவும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சயினா நேவால், தனது டிவிட்டர் பக்கத்தில், “இது ஒரு சிறந்த செயல், ஹைதராபாத் போலீஸுக்கு நாங்கள் சல்யூட்” செய்கிறோம் என பகிர்ந்துள்ளார்.