வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2019 (09:37 IST)

தலித் பெண் எம்பி நின்ற இடத்தை சாணி போட்டு மொழுகிய காங்கிரஸார்

கேரளாவில் பெண் எம்பி ஒருவர் போராட்டம் நடத்திய இடத்தில் சாணி போட்டு மொழுகிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நட்டிக்காரா தொகுதி எம்.எல்.ஏ கீதா கோபி தனது தொகுதிக்கு உட்பட்ட திரிப்ரையார் பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதால் சாலையை சரிசெய்யக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார். 
 
பின்னர் அதிகாரிகள் சரி செய்வதாக உறுதி அளித்ததும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஆனால், இதன் பின்னர் காங்கிரஸ் தொண்டர்கல் சிலர் கீதா நின்ற இடத்தை சாணத்தை உற்றி சுத்தம் செய்துள்ளனர். 
 
இது குறித்து கீதாவிடம் கேட்ட போது, நான் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் காங்கிரஸ் கட்சியினர் சாணம் ஊற்றி சுத்தம் செய்திருபார்கள் என தெரிவித்துள்ளார். ஆனால், இந்த குற்ற்ச்சாட்டை காங்கிரஸ் கட்சியினர் மறுத்துள்ளனர்.