தொடர்புடைய செய்திகள்
- கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
- கேரளாவில் 20 ஆயிரத்திற்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!
- 50 வருட அக்ரிமெண்ட்.. அதானி கையில் திருவனந்தபுரம் விமான நிலையம்!
- மாறு அல்லது மடி: பிரிட்டனுக்கு சுற்றுச்சூழல் அமைப்பு கடும் எச்சரிக்கை
- ஜோ பைடனுக்கு உதவி செய்த ஆப்கானியர் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்பு
கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு! – மீட்பு பணியில் இராணுவம், விமானப்படை!
கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள சேதங்களிலிருந்து மக்களை மீட்க ராணுவம் மற்றும் விமானப்படை விரைந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரளாவின் முக்கிய விவசாய பகுதியான குட்டநாடு பிராந்தியம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். எர்ணாகுளம் மாவட்டத்தில் இடமலையாரு அருகே 2 கி.மீ தூரத்தில் மலையின் ஒரு பகுதி இடிந்ததால் அணை நீர் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள ஆதிவாசி கிராமத்திற்கு இடையேயான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இவ்வாறாக கேரளாவின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள பேரிடர்களில் இதுவரை 10க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இந்நிலையில் மக்களை மீட்க இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை கேரளாவுக்கு விரைந்துள்ளன.
