தொடர்புடைய செய்திகள்
- புது அவதாரம் எடுக்கிறது கொரோனா... நடிகை ஸ்ரீ திவ்யா எச்சரிக்கை!
- கொரோனா பாதித்தவர்கள் எச்சில் துப்பினால் கொலைமுயற்சி வழக்கு! – டிஜிபி எச்சரிக்கை!
- அறிகுறியே இல்லாமல் திடீரென வந்த கொரோனா: கேரள மாணவி அதிர்ச்சி
- ஷாருக் கான் படத்தின் தயாரிப்பாளரின் மகளுக்குக் கொரோனா – தனிமையில் குடும்பம்!
- கொரோனா தோற்க ஆரம்பித்துவிட்டது – பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் ’டுவீட்
கொரோனாவைக் கண்டுபிடிக்க walk-in- kiosk – இந்தியாவிலேயே முதல் முறையாகக் கேரளாவில் அறிமுகம் !
தென் கொரியாவில் கொரோனா நோயாளிகளைப் பாதுகாப்பாக பரிசோதிக்க அறிமுகப்படுத்தப்பட்ட முறையை கேரளாவிலும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
உலகெங்கும் கொரோனா மிகவேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து தினமும் லட்சக்கணக்கானோர் கொரோனா அறிகுறிகளுடன் இருப்பதால் சோதனை செய்யபப்ட்டு வருகின்றனர். கொரோனா பரவும் தன்மை எளிதாக இருப்பதால் நோயாளிகளிடம் இருந்து மருத்துவப் பணியாளர்களுக்கு எளிதாக பரவும் அபாயம் இருக்கிறது.
இதையடுத்து மருத்துவர்களை பாதுகாக்கும் விதமாக தென் கொரியாவில் walk-in- kiosk என்னும் பரிசோதனை முறையானது தற்போது கேரளாவிலும் பின் பற்றப்படுகிறது. அதன் படி கண்ணாடி சுவருக்குள் இருக்கும் மருத்துவர் அதில் இருக்கும் துளைகளின் வழியே கைவிட்டு நோயாளியின் ரத்தம் மற்றும் சளி ஆகியவற்றின் மாதிரிகளை எடுப்பார். அதன் பின்னர் மாதிரிகளை வைத்துக் கொண்டு கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்த முறையின் மூலம் வெறும் நிமிடங்களில் முடிவுகள் தெரிந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறையை அமைக்க 40,000 ரூபாய் செலவாகும் எனக் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
