சனி, 14 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2024 (17:45 IST)

கேரள திரையுலகை உலுக்கும் பாலியல் புகார்.! யார் அந்த நடிகர்கள்.? முதல்வருக்கு முக்கிய கோரிக்கை.!!

Hema Comitte
பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்களின் பெயர்களை வெளியிடக் கோரி கேரள திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.  
 
மலையாளத் திரையுலகில் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை நடந்ததாக ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.   தற்போது நடிகைகள் பலர் தங்களுக்கும் பாலியல் தொல்லை நடந்ததாக புகார் தெரிவித்து வருகின்றனர். பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா மலையாள இயக்குநர் ரஞ்சித் மீதும், மலையாள நடிகை ரேவதி சம்பத், நடிகர் சித்திக் மற்றும் ரியாஸ் கான் மீதும் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். 
 
இதையடுத்து நடிகை மினுமுனீர்  நடிகர் மற்றும் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. முகேஷ் மற்றும் மணியன் பிள்ளை ராஜு, இடைவேளை பாபு, ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.  இதில் ரஞ்சித் மற்றும் நடிகர் சித்திக் இருவரும் இந்த புகார்களைத் தொடர்ந்து அவர்கள் வகித்து வந்த சங்கப் பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்கள் இரண்டு பேர் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
பாலியல் புகாரை தொடர்ந்து கேரள அரசின் குழுவில் இருந்து எம்.எல்.ஏ. முகேஷ் நீக்கப்பட்டார்.  மேலும் பாலியல்  புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் ஒரே நாளில் 14 புகார்கள் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 
இந்த நிலையில் பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்களின் பெயர்களை வெளியிடக் கோரி கேரள திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.