1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 16 டிசம்பர் 2023 (15:14 IST)

மகளை கொலை செய்த வழக்கு.. நீதிமன்றம் செல்லும் வழியில் தற்கொலை செய்த தந்தை..!

கேரளாவில் ஆறு வயது மகளை கொலை செய்த வழக்கில் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜராக கொண்டு சென்ற வழியில் திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 
கேரளாவில் மாவலிக்கரை என்ற பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ ரமேஷ் என்பவர் தனது ஆறு வயது மகளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். 
 
இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு அவர் நீதிமன்ற விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது திடீரென அவர் போலீஸ் ஜிபியில் இருந்து குதித்து அருகில் சென்று கொண்டிருந்த ரயில் மீது  பாய்ந்தார்.
 
இதனால் அவர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran