டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி உமர் முகமது வீடு இடித்து தரைமட்டம்.. பாதுகாப்பு படை அதிரடி..!
டெல்லியின் செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் உமர் முகமது என்கிற உமர்-உன்-நபி என்பவரது வீடு, இன்று அதிகாலையில் தெற்கு காஷ்மீரின் புலவாமாவில் பாதுகாப்பு படைகளின் முன்னிலையில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் மருத்துவராக பணியாற்றிய உமர் முகமதுதான், 13 பேர் கொல்லப்பட்ட கார் குண்டுவெடிப்பு நிகழ்வின்போது வாகனத்தை ஓட்டி சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்திய மண்ணில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வகையில், இந்த அதிரடி புல்டோசர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், பஹல்காம் தாக்குதல் திட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விசாரணையில், உமரின் கூட்டாளிகளிடம் இருந்து சுமார் 2,900 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு பொருட்கள் மற்றும் அதிநவீன ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டைக் காட்டுகிறது.
Edited by Siva