1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : சனி, 3 செப்டம்பர் 2022 (11:54 IST)

ஆடையில் “சுச்சூ” போன சிறுவன், அந்தரங்கத்தில் சூடு வைத்த ஆசிரியர்! – கர்நாடகாவில் அதிர்ச்சி!

கர்நாடகாவில் கால்சட்டையிலேயே சிறுநீர் கழித்த சிறுவனுக்கு ஆசிரியர் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள துமகுருவில் அங்கன்வாடியில் 3 வயது சிறுவன் ஒருவன் படித்து வந்துள்ளான். இந்த சிறுவன் தினசரி அங்கன்வாடியில் அமர்ந்திருக்கும்போது கால்சட்டையிலேயே சிறுநீர் கழித்துள்ளான்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த அங்கன்வாடி ஆசிரியை அந்த சிறுவனை அடித்ததுடன், கால்சட்டையிலேயே சிறுநீர் கழித்ததற்காக சிறுவனின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.